கர்நாடகா: அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து! 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாப பலி - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில்  மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பயங்கர விபத்து கர்நாடக மாநிலத்தின் சம்போஜே என்ற இடத்தில்  பெட்ரோல் பங்க் அருகே நடைபெற்று இருக்கிறது.

கர்நாடக மாநிலம் கன்னியாவிலிருந்து  விராஜ்பேட் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும்   மடிக்கேரியிலிருந்து கன்னியா பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த காரும் சம்பூஜி என்ற இடத்திலுள்ள பெட்ரோல் பங்க் அருகே நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று குழந்தைகள்  இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தை கன்னியா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் காரில் பயணம் செய்தவர்கள்  வண்டியா மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அரசு பேருந்தில் பயணம் செய்த ஒரு சிலருக்கு மட்டுமே லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர்களின் சடலங்கள் கன்னியா அரசு மருத்துவமனையிலும்  தனியார் மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Six people including two children, were tragically killed in a tragic accident in Karnataka


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->