கவலையில் ஆட்டு வியாபாரிகள்! பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகள் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு!
Sheep traders worried Maharashtra orders closure of sheep markets for Bakrid festival
முஸ்லீம் நண்பர்களின் பாரம்பரிய பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. மேலும், இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுவூட்டும் விதமாக இவை கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில், இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை வருகிற ஜூன் 7ம் தேதி அதாவது சனிக் கிழமை கொண்டாடப்படுகிறது.மேலும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகள் விற்பனை வெகு விமர்சையாக இருந்து வருகிறது.இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி மகாராஷ்டிராவில் கால்நடை சந்தைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை மகாராஷ்டிரா கோசேவா ஆயோக் (Maharashtra Goseva Ayog) மாநிலத்திலுள்ள வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கு (APMCs) ஜூன் 3 முதல் 8 வரை கால்நடை சந்தைகளை மூட உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை இருக்கிறது. ஆனால், சந்தைகளையே நடத்தக் கூடாது என்றால் ஆடுகளை எப்படி விற்பது? என வியாபாரிகள் கவலையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இது மகாராஷ்டிரா கோசேவா ஆயோகின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்று சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.
English Summary
Sheep traders worried Maharashtra orders closure of sheep markets for Bakrid festival