விடாமல் விரட்டிய தெருநாய்கள் - 7 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள, பெங்களூரு யலஹங்கா பகுதியில் கொண்டப்பா லே அவுட் சாலையில் நடந்து சென்றவர்களை வெறிநாய் ஒன்று நேற்று மாலை துரத்தி துரத்திக் கடித்துள்ளது. இதில் இரண்டு சிறுவர்கள், ஒரு பெண் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளின் கதவுகளை பூட்டிக் கொண்டு உள்ளேயே தஞ்சமடைந்தனர். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு யலஹங்கா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் தெரிவித்ததாவது, "யலஹங்காவில் ஏராளமான தெருநாய்கள் திரிகின்றன. அன்றாடம் பள்ளிக்குச் செல்பவர்கள், சாலையில் செல்பவர்களை நாய்கள் கடித்து வருகின்றன. 

ஆகவே, தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களைக் கண்டறிந்து பிபிஎம்பி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை பெற உதவிட வேண்டும்" என்றுத் தெரிவித்தனர். பெங்களூருவில், ஒரே நாளில் வெறிநாய் கடித்து 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven peoples addmitted hospital for dog bite in banglore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->