ஆம்புலன்ஸ்களுக்கு தனி சைரன்கள் - மாநில அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே வன்முறை தொடர்ந்து நீடித்துள்ளது. இருப்பினும், மாநில அரசு சார்பில் சட்டம் ஒழுங்கு நிலைமையை திறம்பட பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக போலீசாரால் பயன்படுத்தப்படாத தனித்துவமான 'சைரனை' ஆம்புலன்சுகள் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மணிப்பூர் அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலையைக் கருத்தில் கொண்டு, ஆம்புலன்ஸ்கள், காவல்துறை மற்றும் பிற சட்ட அமலாக்க முகவர்களால் பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஒரே மாதிரியான ஒலிகளைக் கொண்ட சைரன்களைப் பயன்படுத்துவதால் எழும் பிரச்சினைகள் குறித்த விஷயத்தை அரசு கவனித்து வருகிறது. 

இது பொதுமக்களுக்கு குழப்பம் மற்றும் பீதியான சூழ்நிலையை உருவாக்குகிறது. ஆகவே மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களிடையே ஏற்படக்கூடிய தவறான புரிதலைத் தவிர்ப்பதற்காகவும் ஆம்புலன்சுகளில் தனித்துவமான சைரன்களை பொறுத்தஆளுநர் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seperate sirens to ambulance manipur government order


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->