இருசக்கர வாகனத்தின் மீது பள்ளி வேன் மோதி விபத்து: ஒருவர் பலி, 9 குழந்தைகள் படுகாயம்
School van twowheeler accident in Maharashtra
பள்ளி வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 9 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில், குழந்தைகளை ஏற்றி சென்ற பள்ளி வேன் ஒன்று, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு, சாலையோரம் இருந்த கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் பள்ளி வாகனத்தில் இருந்து 9 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், படுகாயமடைந்த 9 குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
School van twowheeler accident in Maharashtra