ஆபாச வீடியோவை காட்டி ஆசிரியை பலாத்காரம்.. நண்பர்களுக்கும் விருந்தாக்கிய இளைஞர்.!
School teacher in Bangalore
ஆபாச வீடியோவை காட்டி இளம் பெண்ணை அவருடைய காதலன் பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பகுதியில் உள்ள ஒரு இளம் பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகின்றார். சமூக வலைதளத்தின் மூலமாக அந்தப் பெண்ணுக்கு ஒரு இளைஞரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. செல்போன் எண்களை பரிமாறிக் கொண்ட இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசி பேசி காதலிக்க துவங்கியுள்ளனர்.
இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து நெருக்கமாக பேசி வந்த நிலையில், காதலியான அவரை அந்த வாலிபர் வீடியோ கால் மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். அதன் பின் நம்பி காதலித்த பெண் என்றும் பாராமல் அதை காட்டி அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார்.
அந்த பெண்ணுக்கு விருப்பம் இல்லாத போதும் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி அவரை பணிய வைத்து பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார். தான் அனுபவித்தது போதாது என்று தனது நண்பர்களையும் அழைத்து காதலியை விருந்தாக்கி உள்ளார். நண்பர்களும் அந்த வீடியோவை காட்டி காட்டி பெண்ணை தங்களுக்கு தேவையான போது பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
இது போதாது என்று அந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்து அந்த பெண்ணை உச்சகட்ட தொல்லைக்கு ஆளாக்கினார்கள். இதை எடுத்து அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சாஷு, ஜார்ஜ், சந்தோஷ் ஆகியோரில் ஜார்ஜ் என்பவர் பெண்ணின் காதலன் ஆவார். அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் பென்டிரைவ் உள்ளிட்டவற்றை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
School teacher in Bangalore