ஒருதலை காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர காதலன்.. போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்..!
School Student killed in Jharkhand
ஒருதலை காதலால் மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தை சேர்ந்தவர் அங்கிதா குமாரி. இவர் அங்கு 12ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவியை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இதனை அந்த மாணவி மறுக்கவே அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுபற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவிக்கும் போது குற்றவாளி கைது செய்துள்ளோம் எனவும் அமைதி காக்கும்படி நாங்கள் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
English Summary
School Student killed in Jharkhand