ஆட்டை பலியாக்கிய 50 வயது நபர்.. அவரையே பலியாக்கிய ஆடு.! சத்தீஸ்கரில் வினோத மரணம்.!  - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் பலியிட்ட ஆட்டால் தானே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சூரஜ் போர் மாவட்டத்தில் வசித்து வரும் பாஹர் சாய் (வயது 50) கடவுளுக்கு ஒரு வேண்டுதல் வைத்துள்ளார். அவரது வேண்டுதல் நிறைவேறிய காரணத்தால் ஒரு ஆட்டை கோயிலுக்கு பலி கொடுக்க முடிவெடுத்துள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ஊர் மக்களுடன் சேர்ந்து பலி கொடுக்க வேண்டிய ஆட்டை எடுத்துக் கொண்டு கோயிலுக்கு சென்று சடங்கு சம்பிரதாயங்கள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு முறைப்படி ஆட்டை பலி கொடுத்தார். பின் பலி கொடுக்கப்பட்ட ஆடு சமைக்கப்பட்டது.

ஊர் மக்களுக்கு அந்த உணவு பரிமாறப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து பாகர் சாயும் சாப்பிட்டுள்ளார். அப்போது ஆட்டின் கண் அவரது தொண்டையில் போய் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிர் இழந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sattisgar old men died Who eat mutton


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->