மசூதி முன் காவி கொடி கட்டியதால் மோதல் மூண்டது! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் மசூதி ஒன்றின் முன்பு இந்து அமைப்பினர் காவி கொடி கட்டியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தை அடுத்த சிருங்கேரி பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் முன்பு நேற்று இரவு இந்து அமைப்பினர் சிலர் காவி கொடி தோரணம், காவி கொடிகளை இயற்றியுள்ளனர். இதனை அப்பகுதியைச் செய்த இஸ்லாமியர்கள் சில தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

பாபாபுட்டங்கிரி யாத்திரையை முன்னிட்டு இந்து அமைப்பினர் அனைத்து சாலைகளிலும் காவி கொடுகளை கட்டி வந்துள்ளனர். ஆனால் மசூதி எதிரே கட்டப்பட்ட காவிக்கொடிக்கு மட்டும் அந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதலாக மாறி உள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். மேலும் இரு சமூகங்களுக்கு இடையே போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதன் காரணமாக சிருங்கேரி பகுதியில் பதட்டமான சூழல் உண்டானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Saffron flags were planted in front of mosque and riots erupted


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->