05 வயது சிறுமிகள் 02 பேரை வெவ்வேறு இடங்களில் பலாத்காரம் செய்த நபர்கள் என்கவுன்டரில் சுட்டு பிடிப்பு..!
raped two 5 year old girls at different places were shot and arrested in an encounter
உத்தர பிரதேசத்தில் 05 வயது சிறுமிகள் 02 பேர், இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் வேறு, வேறு இடங்களில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் காமியாபூர் பகுதியை சேர்ந்தவர் கமல் கிஷோர் என்றகிற பட்டார். அங்கு குடிசை பகுதியில் வசித்து வரும் இவர், நேற்று முன்தினம் அதிகாலை 02 மணியளவில், 05 வயது சிறுமியை புதருக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அடுத்த நாள் காலையில் சிறுமியை காணவில்லை என குடும்பத்தினர் தேடி கிடைக்காத நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, ரத்தம் வழிய வழிய சிறுமி வீட்டுக்கு வந்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரனை நடத்தியதில், சிறுமிரை பட்டார் தொக்கி சென்று துஸ்பிரயோயம் செய்தமை தெரியவந்துள்ளது. அவனை பிடிக்க போலீசார் சென்ற போது, லக்னோ நகரில், போலீசாரை அவன் பார்த்ததும் பைக்கில் தப்ப முயன்றபோது, தவறி விழுந்துள்ளான்.
அவரை போலீசார் பிடிக்க முற்பட்டபோது அவன் தப்பிக்க முயற்சித்த கமல் கிஷோர் போலீசாரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதனால் பதிலுக்கு போலீசார் சுட்டதில், அந்நபரின் காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவனை கைது செய்துள்ளனர்.
இதேபோன்று புலந்த்சாகர் பகுதியில், 06 வயது சிறுமி ஒருவரை ரவீந்திரா என்பவர் நேற்று பலாத்காரம் செய்துள்ளார். அவரை குர்ஜா திகாத் காவல் நிலைய போலீசார் தேடி வந்த நிலையில், இன்று காலை போலீசாருடனான என்கவுன்டரில் காயமடைந்த அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதன் பின்பு அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அத்துடன், உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் வீடு அருகே விளையாடிய 05 வயது சிறுமியை, அந்த வீட்டின் அருகே உள்ள கோவிலுக்குள் வரும்படி கூறி அழைத்து சென்ற வாலிபர் ஒருவர் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றிய சி.சி.டி.வி. வீடியோ ஒன்று வைரலக்கியுள்ளது.
இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதாவது, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற பொய்யான தகவலால் விடுவிக்கப்பட்ட அவர், வீடியோவை தொடர்ந்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
raped two 5 year old girls at different places were shot and arrested in an encounter