தண்டனை நிறுத்திவைப்பு! ராகுல்காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


மோடி சமூகம் குறித்து அவதூறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த ராகுல் காந்தி மீது, மோடி சமூகத்தை சேர்ந்த குஜராத் பாஜக எம்எல்ஏ., அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தொடர்ந்து ராகுல்காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியும் தகுதிநீக்கமானது.

இதனையடுத்து ராகுல்காந்தி அதே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு மனுவையும் சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது.

தொடர்ந்து, தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து, அவரின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்தும், தண்டனையை நிறுத்தி வைக்ககோரியும், தனக்கு இடைக்கால நிவாரணம் கோரியும்  உச்ச நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ராகுல்காந்தியின் தண்டனை நிறுத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோர் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RahulGandhi Case Judgement SC Order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->