சத்தீஸ்கரில் நின்றிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து - 7 பேர் பலி, 3 பேர் காயம்.!
Private bus lorry accident in Chhattisgarh
சத்தீஷ்கர் மாநிலத்தில் நின்றிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் இருந்து சுர்குஜா மாவட்டம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அதிகாலை மடாய்கட் பகுதி அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக நின்றிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் முதல்கட்ட விசாரணையில், எதிர் திசையில் இருந்து வந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக, திரும்பிய போது லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது என்று தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Private bus lorry accident in Chhattisgarh