கர்நாடக காங்கிரஸ் ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி; 'முதல்வர் மாற்றத்திற்கு காரணம் இதுதான்'; பிரதமர் மோடி விமர்சனம்..!
Prime Minister Modi criticizes the reason behind the change of Chief Minister during the Karnataka Congress government
குஜராத்தின் சூரத் நகரில் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் கோரியதாவது;
கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு மீது மக்களுக்கு மிகுந்த கோபம் உள்ளது. அதனால்தான் முதல்வரை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்ட்டுள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மற்ற மாநிலங்களிலும் வாக்காளர்களின் கடும் அதிருப்தியை அக்கட்சி எதிர்கொண்டு வருகிறதாக விமர்சித்துள்ளார்.
அத்துடன், இமாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களிலும், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் நடந்த தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளதை சுட்டிக்காட்டி, அக்கட்சியின் ஆட்சி நிர்வாகம் குறித்து மக்கள் சலிப்படைந்து வருகிறார்கள் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து மோடி பேசுகையில் குறிப்பிட்டதாவது; சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி தேர்தல்களில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களிடம் இருந்து மிகப் பெரிய ஆதரவைப் பெற்றுள்ளன என்று பாஜகவின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி பேசியயுள்ளார்.
அத்துடன், நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்று வருகிறது. ஒவ்வொரு தேர்தலும் ஒரே செய்தியைத்தான் உணர்த்துகின்றன. குழப்பம், நிச்சயமற்ற தன்மை, விரக்தி ஆகியவற்றை நாடு விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, எரிசக்தித் துறையில் தன்னிறைவு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது என்றும், கடந்த 12 ஆண்டுகளில் நாடு கட்டமைத்துள்ள திறன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் வளர்ச்சியை முன்னுரிமையாகக் கொண்டு எங்கள் (பாஜக) அரசு செயல்பட்டு வருகிறதாகவும், அதனால்தான் பாஜக மீதும் அதன் வளர்ச்சித் திட்டங்கள் மீதும் நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதானால்தான் மக்கள் மீண்டும் மீண்டும் பாஜகவுக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள் என்று பிரதமர் மோடி சூரத்தில் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Prime Minister Modi criticizes the reason behind the change of Chief Minister during the Karnataka Congress government