நுரையீரல் பாதிப்பால் பரிதாப மூளைச்சாவு.! கண்ணீருடன் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி காரியத்தால்., மூவரின் உடலில் உயிர்வாழும் 12 வயதுடைய பெண்.!!
Poor brain failure by the lungs girl died in vellore
ஆந்திரபிரேதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதியில் இருக்கும் ஸ்ரீநகர் காலனியை சார்ந்தவர் பாலாஜி. இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் சைலஜா.
இவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில் 12 வயதுடைய லீகிதா என்ற மகளும்., 9 வயதுடைய மகிதா என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகின்றனர்.
பள்ளியில் 7 ம் வகுப்பு பயின்று வரும் லிகிதாவிற்கு நுரையீரல் பாதிப்பானது ஏற்பட்டுள்ளது. இவரது உடல் நிலையானது தொடர்ந்து மோசமானதை தொடர்ந்து., வேலூரில் இருக்கும் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
லிகிதாவிற்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில்., இன்று காலையில் அவருக்கு மூளைசாவானது ஏற்பட்டது. இதனையடுத்து இதனை அறிந்த பெற்றோர்கள் கண்ணீருடன் இருந்த நிலையில்., அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்வந்தனர்.
இதனை மருத்துவர்களிடம் தெரிவித்ததை அடுத்து., மருத்துவர்கள் லிகிதாவின் கண்., கிட்னி., இதயம் ஆகிவற்றை அவரது உடலில் இருந்து வெளியெடுத்தனர். இவரின் உடல் பாகத்தை சென்னையில் இருக்கும் மலர் மருத்துவமனையானது தானமாக பெற்ற பின்னர் இவரின் உடல் பாகங்கள் பாதிப்பு உள்ளவர்களுக்கு பொறுத்தப்படவுள்ளது. தனது குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோருக்கு நன்றி....
English Summary
Poor brain failure by the lungs girl died in vellore