#Breaking: புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 24 வரை நீட்டிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாளொன்றுக்கு 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர் பலியாகி வருகின்றனர். 

புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், நாளொன்றுக்கு அம்மாநிலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் மே மாதம் 10 ஆம் தேதி வரை ஏற்கனவே மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில், தளர்வுகளுடன் கூறிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மாநிலத்தில் மே மாதம் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்ய்யப்பட்டுள்ளது. மே மாதம்  தேதியில் இருந்து மே 24 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய கடைகள் பகல் 12 மணிவரை மட்டும் செயல்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pondicherry Lockdown Extended till 24 May 2021


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->