புயல் கடந்தாலும், கனமழை எதிரொலி.. 28 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்த அதிதீவிர புயலான நிவர், புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் சமயத்தில், புதுச்சேரியில் இருந்த சில பகுதிகளில் 120 கிமீ வேகம் முதல் 140 கிமீ வேகம் வரை காற்று வீசியது. மேலும், கனமழையும் பெய்து வந்தது. 

இந்த நிலையில், நிவர் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி பயணம் செய்து, 3 மணிநேரத்தில் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது. மேலும், புயலின் காற்று வேகம் மெல்லமெல்ல குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நிவர் புயலின் தாக்கம் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனைத்தொடர்ந்து ஏற்கனவே அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீர், மின் இணைப்பு துண்டிப்பு போன்ற காரணத்தால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 28 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
 
Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry Govt Announce School Leave till 28 November 2020 due to Nivar Heavy Rain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->