இரண்டாவது மாடியில் இருந்து குதித்த காவலர்.. மன அழுத்ததால் நிகழ்ந்த சோகம்..!
Police man committed suicide due Depression
மன அழுத்தம் காரணமாக காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆள் சேர்ப்பு பிரிவில் வேலை செய்து வருபவர் மகேஷ் (36). இவர் கடந்த சில மாதமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். மேலும், மன அழுத்ததிற்கான சிகிச்சையும் எடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை காவலர் பயிற்சி பள்ளிக்கு பணிக்கு வந்த அவர் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை மீட்ட காவலர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.
104
044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.
English Summary
Police man committed suicide due Depression