ஓடும் பஸ்சில், இளம்பெண் முன் கேவலமான செயல்: வாலிபரை சிறையில் அடைத்த போலீசார்..!
Police jail youth for sexually assaulting young woman on moving bus
ஓடும் பஸ்சில் வைத்து இளம்பெண் முன் ஆபாச போஸ் கொடுத்த வாலிபரை திருச்சூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இதேபோன்ற புகாரின் பேரில் கைதாகி இவர் சிறை சென்றவர்.
சம்பவத்தன்று மலப்புரத்தில் இருந்து திருச்சூருக்கு கேரள அரசு பஸ்சில் 28 வயது இளம்பெண் பயணம் செய்த போது, அவருக்கு அருகே அமர்ந்திருந்த ஒரு வாலிபர் அந்த இளம்பெண் முன் ஆபாசமாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனே திருச்சூர் கிழக்கு போலீசில் புகார் செய்துள்ளார்.

உடனடியாக வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் கோழிக்கோட்டை சேர்ந்த நவாஸ் (33) என்பவர் இவ்வாறு ஆபாச போஸ் கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் நவாசிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் ஏற்கனவே கடந்த இரு வருடங்களுக்கு முன்பும் இதேபோல ஓடும் பஸ்சில் பெண் பயணிகள் முன் ஆபாசமாக போஸ் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.
English Summary
Police jail youth for sexually assaulting young woman on moving bus