மர்ம முறையில் உயிரிழந்து கிடந்த தம்பதியினர் - கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணையில் போலீசார்.!! - Seithipunal
Seithipunal


மர்ம முறையில் உயிரிழந்து கிடந்த தம்பதியினர் - கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணையில் போலீசார்.!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே பி.மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார்-சாரதா தம்பதியினர். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாகவே சோபனபுரத்தில் தோட்டத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்து விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் ராஜ்குமாரும் சாரதாவும் வழக்கம் போல் சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்துத் தூங்கியுள்ளனர். பொழுது விடிந்தும் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்துள்ளனர். இதனை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்துச் சென்றுள்ளனர். 

அப்போது தான் தம்பதியினர் இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தம்பதியரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதன் பின்னர் போலீசார் மோப்ப நாய் மற்றும் தடவியல் துறையினரை வரவழைத்து சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகள் குறித்தான தடயங்களைச் சேகரித்தனர். 

மேலும், போலீசார் சம்பவ இடத்தில் பதிவான செல்போன் டவர் சிக்னல்கள், தம்பதியரின் செல்போன் கால் ஹிஸ்டரி போன்றவற்றை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police investigation of couple murder case in trichy


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->