உடற்பயிற்சி செய்த காவலர் மயங்கி விழுந்து பலி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!
Police constable death in Telungana
சமீப சில நாட்களாக நாடக கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட சிலர் அந்தந்த மேடைகள் மற்றும் மைதானங்களிலேயே அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிலும், குறிப்பாக வட மாநிலங்களில் இது போன்ற மரணங்கள் நிகழ்ந்து வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் பகுதியில் ஆசிப் நகர் காவல் நிலையத்தில் விஷால் (வயது 24) என்ற இளைஞர் போலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்துள்ளார். இவர் தினமும் உடற்பயிற்சி செய்துவந்துள்ளார். அந்த வகையில் நேற்று வழக்கம்போல் இரவு 8 மணி அளவில் விஷால் உடற்பயிற்சி செய்வதற்காக ஜிம்முக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீஸ் கான்ஸ்டபிள் விஷாலை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Police constable death in Telungana