இதெல்லாம் வெறும் ட்ரெய்லர் தான் - பரப்புரையில் பட்டைய கிளப்பிய மோடி.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- ”கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் செய்யப்பட்டவை அனைத்தும் வெறும் ட்ரெய்லர் தான். இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

நாட்டை முன்னேற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, கோதுமைப் பொருட்களுக்கு கூட போராடும் சிறிய நாடுகளின் பயங்கரவாதிகள், இஷ்டத்துக்குத் தாக்குவர். ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், இந்தியா பதிலடி கொடுக்கத் துவங்கியுள்ளது.

 

ரயில்வேயில் ஏழைகளுக்கு வேலை வழங்குகிறோம் என்ற பெயரில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களால்  பீகார் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. ஒருபுறம் புதிய தொழிற்சாலைகளை அமைப்பது பற்றி பேசும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உள்ளது. மறுபுறம், கடத்தல் தொழில் மட்டுமே புகழ் பெற்றதாகக் கூறும் நபர்களும் உள்ளனர்.

ஒருபுறம் சூரிய மின்சக்தி மற்றும் எல்இடி விளக்குகள் பற்றி பேசும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உள்ளது. மறுபுறம் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள திமிர்பிடித்த தலைவர்கள், பீகாரை மீண்டும் விளக்கு யுகத்துக்கு கொண்டு செல்ல விரும்புகிறார்கள்” என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi speech in election campaighn in bihar jamuy


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->