ஜி-7 உச்சி மாநாடு, அமீரக பயணங்களை முடித்து விட்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


ஜெர்மனி, அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்.

இந்திய பிரதமர் மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த 25-ம் தேதி ஜெர்மனி சென்றார். அங்கு ஸ்குலோஸ் எல்மாவ் நகரில் நடத்த ஜி-7 உச்சி மாநாட்டில் அவர் 26,27-ந் தேதிகளில் கலந்துகொண்டார்.

ஜெர்மனி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அங்கு இருநாட்டு தலைவர்களும் பொருளாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

 இந்நிலையில், ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி நேற்று இரவு வந்தடைந்தார். ஜெர்மனி, அமீரக பயணத்தை முடித்துவிட்டு இந்தியா வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi return to India after visiting Germany and UAE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->