ஐயோ! திடீரென மயங்கி விழுந்து இறந்த பிளஸ் டூ மாணவி...! பிறந்தநாளன்று இறந்த சோகம்...! - Seithipunal
Seithipunal


கேரளாவில் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா போல்பள்ளியில் அருகே சிராவட்டம் பகுதியை சேர்ந்வர்கள் ராஜன் மற்றும்  பிந்து தம்பதியர். இவர்களின் மகள் 18 வயதான ஸ்ரேயா என்பவர் 12-ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று, கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க முடிவு செய்தார்.

இதில் நேற்றுமுன்தினம் பிறந்த நாளை கொண்டாட ஸ்ரேயா காலையில் எழுந்து குளிக்க குளியலறைக்கு சென்றபோது, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் பிந்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரேயாவை மீட்டு சிகிச்சைக்காக சித்தூர் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

இருப்பினும், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் கதறி அழுதாள்.இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் இதய பிரச்சினை காரணமாக அவர் இறந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சித்தூர் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

plus two student suddenly fainted and died The tragedy of dying on her birthday


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->