தொடர் மழையால் மக்கள் அவதி...! என்ன செய்தது கர்நாடக அரசு?
People are suffering due to continuous rain What did Karnataka government do
தென்மேற்கு பருவமழை தென் இந்தியாவில் முன்கூட்டியே தொடங்கி தீவிரமடைந்து வருகிறது.இதனால் பல இடங்களில் நிலச்சரிவு, மரங்கள் முறிவது, மரங்கள் சாய்ந்து விழுந்தது உள்ளிட்ட பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.அதுமட்டுமின்றி, வீடு இடிந்து விழுந்து, மரம் சாய்ந்து விழுந்து இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 5-வது நாளாக நேற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.மேலும், இன்று கடலோர, மலை மாவட்டங்களில் 6-வது நாளாக மழை பெய்து வருகிறது.
குடகு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி நதியின் பிறப்பிடமான தலைக்காவிரியில் கனமழை கொட்டி தீர்க்கிறது.
இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தோனிகல்லு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வெள்ளம் சூழ்ந்த தோனிகல்லு கிராமத்தில் 80 குடும்பங்கள் பரிதவித்து வந்தது.
இதனால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்தத் தொடர் மழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
English Summary
People are suffering due to continuous rain What did Karnataka government do