இன்று முதல் சுங்கக் கட்டணக் குறைப்பு: விரைவுச் சாலைப் பயணிகளுக்கு மத்திய அரசின் மெகா சலுகை!
Pay Only for What You Drive New Toll Rules for Expressways Effective Today
தேசிய விரைவுச் சாலைகளில் (Expressways) சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இன்று (பிப். 15) முதல் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. 2008-ஆம் ஆண்டு சுங்கக் கட்டண விதிகளில் செய்யப்பட்டுள்ள இந்தத் திருத்தம் வாகன ஓட்டிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள்:
பயன்பாட்டிற்கு மட்டுமே கட்டணம்: இதுவரை விரைவுச் சாலைகளின் கட்டுமானப் பணிகள் முழுமையடையாத நிலையிலும், அதன் முழு நீளத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி, பணிகள் முடிந்து போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டுள்ள தூரத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.
குறைந்த கட்டண விகிதம்: முழுமையாக முடிக்கப்படாத விரைவுச் சாலைப் பகுதிகளுக்கு, விரைவுச் சாலைக்கான கூடுதல் கட்டணத்தைத் (25% extra) தவிர்க்கலாம். அதற்குப் பதிலாகச் சாதாரண தேசிய நெடுஞ்சாலைகளுக்கு (NH) இணையான குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும்.
காலக்கெடு: இந்தச் சலுகை அந்தச் சாலை முழுமையாகத் திறக்கப்படும் வரை அல்லது அதிகபட்சமாக ஓராண்டு காலம் வரை அமலில் இருக்கும்.
நெரிசல் மிகுந்த பழைய நெடுஞ்சாலைகளுக்குப் பதிலாக, மக்கள் புதிய விரைவுச் சாலைகளைப் பயன்படுத்த ஊக்கப்படுத்துவதே இதன் நோக்கம். இதனால் பயண நேரம் மிச்சமாவதுடன், எரிபொருள் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசு குறைவதும் உறுதி செய்யப்படும். குறிப்பாகச் சரக்குப் போக்குவரத்துப் பிரிவினருக்கு இது மிகப்பெரிய நிதிச் சுமையைக் குறைக்கும்.
English Summary
Pay Only for What You Drive New Toll Rules for Expressways Effective Today