சீக்கிரம் துணை தலைவரை தேர்ந்தெடுங்க! காங்கிரஸ் தலைவர் கடிதம்!  - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, மக்களவைத் துணைத் தலைவரை நியமிக்க வேண்டுமென அவைத்தலைவர் ஓம் பிர்லாவிடம், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2019 தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட மக்களவையில் இதுவரை துணைத்தலைவர் நியமிக்கப்படவில்லை. அரசியலமைப்பு ஆணையை மேற்கோள்காட்டி துணைத் தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், "மக்களவை துணைத் தலைவர் ஒருமித்த கருத்தோடு நிரப்பப்பட வேண்டும். வரும் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும் முன்னாள் மக்களவையின் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு ஆணையை மக்களவை பின்பற்றும் என்று நம்புகிறேன். 

மாநிலங்களவை அதன் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க தயாராகி வருகிறது. ஏற்கனவே ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில், உடனடியாக மக்களவைத் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parliament deputy speaker issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->