அதிரடி தடை! பாகிஸ்தான் தலையில் இடியை இறக்கிய இந்திய அரசு! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததையடுத்து, மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானைச் சேர்ந்த விமானங்கள் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள், பாகிஸ்தான் நிறுவனங்கள் அல்லது அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள, சொந்தமாகவோ குத்தகைக்கு எடுக்கப்பட்டவையோ விமானங்களுக்கு இந்திய வான்வெளி முடக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் தடை பாகிஸ்தான் ராணுவ விமானங்களுக்கும் பொருந்தும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவைகள் ஏற்கனவே இல்லை. எனினும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லும் பாகிஸ்தான் விமானங்கள், இந்திய வான்வெளி வழியாகச் சென்றுவருவதால், தற்போது அந்த வழிமுறைகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பாகிஸ்தான் விமான சேவைகளுக்கு நேரடி பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pahalgam attack India pakistan army plane


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->