10 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு... 2 ஆண்டுகளில் 33 நபரால்.. காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!
old man cheated by cuber crimes
குஜராத்தில் உள்ள தினேஷ் பட்டேல் என்பவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அது போலீஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அளித்த புகாரில் கடந்த 2017ஆம் ஆண்டில் பிரபல நிறுவனத்தில் இருந்து ஒரு ஈமெயில் வந்ததாகவும், அதில் 10 ஆயிரம் மதிப்புள்ள சுற்றுலா செல்வதற்கான ஆஃபர் வழங்கப்பட்டிருப்பதாக அந்த குறுஞ்செய்தியில் இருந்தது. அந்த மெயிலில் முதலில் பத்தாயிரம் நான் செலுத்த வேண்டும் பின் உறுதியாக பரிசு கிடைக்கும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
அதை நம்பி அவர் 10,000 ரூபாயை ஆன்லைனில் செலுத்தியுள்ளார். அப்போதிலிருந்தே பல நபர்களிடம் இவ்வாறான குறுஞ்செய்தி வந்துள்ளது. எனவே அவர் offer கிடைக்க பணம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்ததால்இவரும் பணம் செலுத்தி வந்துள்ளார்.
அந்த வகையில் 2017 அக்டோபர் 18 ஆம் தேதியிலிருந்து 2019 நவம்பர் 27ஆம் தேதி வரையிலும் கிட்டத்தட்ட 9 கோடியை இழந்து உள்ளதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் 10 ஆயிரத்திலிருந்து 50 லட்சம் வரை என்று பலமுறை அனுப்பியும் எந்த ஒரு ஆஃரும் அவருக்கு வழங்கப்படவில்லை.'
மேலும் செலுத்திய பணமும் திரும்பி பெறப்பட வில்லை என்று அவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அந்த 33 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
old man cheated by cuber crimes