சித்தராமையாவை லெப்ட், ரைட் வாங்கி.. சித்து வேலை காட்டிய மூதாட்டி.!
old lady argue with chitharamaiya
வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற போது முன்னாள் முதல்வர் முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் மூதாட்டி ஒருவர் வாக்குவாதம் செய்த காட்சி வெளியாகி இருக்கின்றது.
கர்நாடகாவின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்த மழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5000 பேர் இந்த மழையின் காரணமாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மழையால் சேதமடைந்த சுற்றுவட்டாரப் பகுதிகளை முன்னாள் முதல்வர் சித்தராமையா பாரவியிட்டார். அப்போது மூதாட்டி ஒருவர் சித்தராமையாவிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
தங்களுக்கு வாக்களித்தால் வீடு தருவதாக கூறினீர்களே நாங்க ஓட்டு போட்டு விட்டோம். ஆனால் வீடு எங்கே எனக் கேட்டு அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வீடு கொடுக்கப் போவது யார் என அவர் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
English Summary
old lady argue with chitharamaiya