ஒடிசா || கால்பந்து போட்டியில் மின்னல் தாக்கி 2 வீரர்கள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஒடிசாவில் கால்பந்து விளையாட்டின்போது விளையாட்டு திடலில் மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில்,  21 பேர் படுகாயமடைந்தனர். 

ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கர் மாவட்டத்தில் பனீலாட்டா பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெற்றது. 

அந்த நேரத்தில், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. மின்னல் ஆரம்பித்ததும், வீரர்கள் பாதுகாப்பான இடங்களை தேடி பதுங்குவதற்கு விரைந்தனர். ஆனால் விளையாட்டு மைதானத்தில் திடீரென மின்னல் தாக்கியதில், 21 பேர் படுகாயமடைந்த நிலையில் வீரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

அதில் மொத்தம் இரண்டு கால்பந்து வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் 21 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ரூர்கேலா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

odisa food ball match Lightning two players died


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->