மணமகனுக்கு பரிசாக அளித்த கார். ! அத்தையை பழிவாங்கிய சோகம்.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம் அக்பர்பூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் திருமணம் நடைபெற்றது. அப்போது, திருமணத்திற்கு முன்பு நடைபெறும் திலகமிடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு வந்த மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார்கள் காரை பரிசளித்தனர். 

இதையடுத்து, மாப்பிள்ளை தனக்கு கார் ஓட்டத் தெரியாது என்பதை மறைத்து, பெண் வீட்டார் அன்பாக கொடுத்த காரை ஓட்டிப் பார்க்கும் ஆசையில் வேகமாக புறப்பட்ட மாப்பிள்ளை, பிரேக்கை  பிடித்து வண்டியை திருப்புவதற்கு பதில் ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்தி உள்ளார். 

இதனால், கார் பாய்ந்து மணமக்களை வாழ்த்துவதற்காக திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மீது மோதியது. இதில், மணமகனின் அத்தை மீது கார் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில், 10 வயது சிறுமி உள்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். 

அதன் பின்னர், அருகிலிருந்தவர்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்து மணமகனை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttara pradesh marriage gift car woman died


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->