தேர்வை சரியாக எழுதாத மாணவன் - அடித்து கொன்ற ஆசிரியர்..! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் அவுரியா மாவட்டத்தில் பாபோண்ட் சாலையில் உள்ள அரசுப் பள்ளியில் தலித் மாணவரான நிகில் குமார் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

அந்த வகுப்பின் சமூகஅறிவியல் ஆசிரியாரான அஸ்வின் சிங் அண்மையில் நடத்தப்பட்ட தேர்வில் மாணவன் தவறாக எழுதியிருந்ததால், அவனை சரமாரியாக அடித்துள்ளார்.

ஆசிரியர் தாக்கியதில் பலத்த காயமடைந்த தலித் மாணவன் திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இந்நிலையில், கடந்த 10 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிகில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மாணவனின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் போலீசார் ஆசிரியரை விசாரானை செய்து வருகின்றனர்.

மேலும், ஆசிரியரைக் கண்டித்து உறவினர்கள் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near utra pradesh teacher kill student


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->