தந்தை கண் முன்னே தூக்குபோட்டு தற்கொலை செய்த மகள்.! நடந்தது என்ன?  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்தாரா பகுதியைச் சேர்ந்தவர் சுபேதார் ராவ்ஜி பாட்டீல். இவர் மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் நவி மும்பையை சேர்ந்த லட்சுமணனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

இதை தொடர்ந்து ஐஸ்வர்யா தனது கணவருடன் நவி மும்பை பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்போது, புதிய வீடு வாங்குவதற்காக பெற்றோரிடம் இருந்து வரதட்சணை வாங்கி வர வேண்டும் என்று லட்சுமணின் அக்கா ஐஸ்வர்யாவை வற்புறுத்தி வந்துள்ளார். 

இதற்கிடையே லட்சுமணனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. அவரும் ஐஸ்வர்யாவை அவதூறாக பேசி வந்துள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா தனது தந்தைக்கு வீடியோ கால் செய்து, அழுதுள்ளார். 

பின்னர் அவர் வீடியோகால் இணைப்பை துண்டிக்காமல் அழுது கொண்டே திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜஸ்வர்யாவின் தந்தை லட்சுமணனுக்கு செல்போனில் தொடர்புகொண்டுள்ளார்.

ஆனால் லட்சுமணன் போனை எடுக்கவில்லை. இதையடுத்து ஐஸ்வர்யாவின் தந்தை பொலிசாருக்குத் தகவல் அளித்துள்ளார். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra young woman sucide in navi mumbai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->