2 வருடங்களுக்கு முன்பு பாலியல் தொல்லை அளித்த இளைஞர்.! தாயை துப்பாக்கியால் சுட்ட சிறுமி கைது.!  - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள தெற்கு ஹூண்டா பகுதியை சேர்ந்தவர் பதினேழு வயது சிறுமி. இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு அதேபகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிப்புக்கு ஆளான சிறுமி அந்த இளைஞன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில், அந்த சிறுமி கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரின் தாயை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதாவது, சுபாஷ் மொஹலா என்ற பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த அந்த இளைஞரின் வீடு மற்றும் பெட்டிக்கடை உள்ளது. 

இன்று அந்த கடைக்கு துப்பாக்கியுடன் சென்ற சிறுமி கடையில் உள்ள அந்த சிறுவனின் தாயை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால், படுகாயமடைந்த அந்த பெண்ணை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து போலீசார் பாலியல் தொல்லை அளித்த இளைஞரின் தாயை துப்பாக்கியால் சுட்ட சிறுமியை கைது செய்து, அவரிடமிருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near delhi woman injury for girl gun shoot


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->