மும்பை 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து.. 2 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மும்பையில் 4 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

மும்பை குர்லாவில் உள்ள நாயக் நகரில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் இடையே சிக்கி உள்ளவர்களை மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில், 25 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த கட்டிட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 28 மற்றும் 30 வயதுடைய 2 ஆண்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai 4 storey building collapses 2 killed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->