திரு.வினோபா பாவே அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


 பூமிதான இயக்கம் மூலம் நிலம் இல்லாத மக்களுக்கு  நிலம் வைத்திருப்பவர்கள் கொடையாக வழங்குவதற்காக பூமிதான இயக்கம் தொடங்கி அரும்பணியாற்றிய
திரு.வினோபா பாவே அவர்கள் பிறந்ததினம்!.

சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ககோடா என்ற கிராமத்தில் பிறந்தார்.

 மகாராஷ்டிர தர்மா என்ற மாத இதழை 1923-ல் தொடங்கினார். கதர்ஆடை, கிராமத் தொழில்கள், கிராம மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுக்காகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும் பாடுபட்டார்.

 தேவையுள்ளவர்கள் அதிகம் இருக்கும் இங்கு, கொடுக்கும் மனம் உள்ளவர்களும் நிறைய பேர் இருப்பதை புரிந்துகொண்ட வினோபா, இரு தரப்பினருக்கும் பாலமாக இருக்க முடிவு செய்தார். பூதான் எனப்படும் பூமிதான இயக்கத்தை தொடங்கினார். எனவே இவர் பூமிதான இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

 இவர் 13 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடைபயணம் மேற்கொண்டார். சுமார் 40 லட்சம் ஏக்கர் நிலத்தை தானமாகப் பெற்றார். 1979-ல் உண்ணாவிரதம் இருந்து, பசுவதை தடைச் சட்டத்தை கொண்டுவரச் செய்தார்.

 என்னைவிட காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக்கொண்டவர் என்று காந்திஜியால் புகழாரம் சூட்டப்பட்டவர். மக்களாலும் தலைவர்களாலும் ஆச்சார்யா என்று போற்றப்பட்ட வினோபா பாவே தனது 87-வது வயதில் 1982 நவம்பர் 15 ஆம் தேதி அன்று மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mr Vinoba Bhave was born on this day


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->