2 வதும் பெண் குழந்தை.. ஆத்திரத்தில் தாய் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததால், குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாபாத்தில் ஹோலி பகுதியில் வசிப்பவர் 25 வயது பெண். இவருக்கு இரண்டாவது முறையாக காசர் ஜவாலா கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இரண்டாவது முறையும் பெண் குழந்தை பிறந்ததால் அந்த பெண் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் அந்தப் பெண் குழந்தை பிறந்து மூன்று நாட்களேயான நிலையில், கடந்த டிசம்பர் 29ஆம் தேதி, பிறந்த குழந்தையை கை குட்டையால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். இதையடுத்து குழந்தை இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில் இரண்டாவது முறையும் பெண் குழந்தை பிறந்ததால் தாயே குழந்தையை கொன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும் பிறந்து மூன்று நாட்களேயான குழந்தையை தாயைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother arrested for killing 3 day old baby in Maharashtra


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->