மாற்றுத்திறனாளி மகளை தரையில் அடித்துக் கொன்ற தாய்.! குஜராத்தில் சோகம்.!   - Seithipunal
Seithipunal


மாற்றுத்திறனாளி மகளை தரையில் அடித்துக் கொன்ற தாய்.! குஜராத்தில் சோகம்.!  

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் அருகே சேர்ந்த பில்கிஸ் காமனி என்ற பெண்ணுக்கு திவ்யாங் என்ற மாற்றுத் திறனாளி மகள் உள்ளார். இவர் பல்வேறு உடல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் மன வருத்தத்தில் பில்கிஸ், ஒரு கட்டத்தில் மகள் மீது வெறுப்புக் காட்ட ஆரம்பித்தார். இந்த நிலையில் திவ்யாங் அழுதபடி இருந்ததனால், அவரை சமாளிக்க முடியாமல் அவரது தாய் பில்கிஸ் தவித்து வந்துள்ளார்.

சிறிது நேரத்தில் பொறுமையை இழந்த தாய் பில்கிஸ் பெற்ற மகளை தூக்கி தரையில் அடித்துள்ளார். அதில், அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் பில்கிஸ். தன் மகளை போர்வை போர்த்தி உறங்குவது போல் வைத்துள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த கணவரிடம் பில்கிஸ் மகளுக்கு வலிப்பு வந்ததில் தடுமாறி தரையில் விழுந்து விட்டதாகவும் பிறகு சமாதானமாகி உறங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பில்கிசின் கணவர் மகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் சார்பில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், சிறுமியை கான்ட்ஸ்றது அவரது தாய் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் பில்கிஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother arrested for kill daughter in gujarat soorath


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->