காமவெறி பிடித்த சைகோவால் 14 மாத பெண் குழந்தை துடி துடித்த பரிதாபம் : 20 ஆயிரம் மக்கள் நேரடி பாதிப்பு : மாநிலத்தை உலுக்கிய அதிர்வலை.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா என்ற மாவட்டத்தில் கடந்த மாதம் 14 வயது பெண் குழந்தையை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக தகவல் வெளியானது.

இந்த சம்பவம் நடந்ததன் எதிரொலியாக குஜராத் மாநிலம் முழுவதும் தங்கி வேலை செய்யும் வட மாநிலத்தவர்களுக்கு எதிராக தாக்குதல் தொடங்கியது.

குஜாரத் மாநிலத்தில் அதிகம் இந்தி பேசும் பகுதியான வடக்கு குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வட மாநில மக்கள் மீது அதிக அளவில் தாக்குதல் அரங்கேறியது.

இதனால் நிலையை சமாளிக்க முடியாமல் சுமார் 20 ஆயிரம் வடமாநில மக்கள் குஜராத் மாநிலத்தை விட்டு வெளியேறினர்.

தமிழகத்தை போலவே , வடமாநிலத்தவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் இந்திய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துடன் தொடர்புடைய காமுகனை குஜராத் மாநில காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவன் பிகார் மாநிலத்தில் இருப்பது தெரிய வந்தது.

உடனடியாக பீகாருக்கு சென்ற குஜராத் மாநில காவல் துறையினர் அங்கு தன்சோய் காவல் நிலையை எல்லைக்குட்பட்ட பகுதியில் அவனை நேற்றிரவு கைது செய்தனர்.

கைதான காமுகனின் பெயர் அணில் குமார் என்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு விசாரணைகள் நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

molestation-of-14-month-old-girl-in-Gujarat-arrested


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->