கிரிக்கெட் போட்டியைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ - நொடியில் நடந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் உள்ள கலாஹந்தி மாவட்டம் நர்லா தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் பூபிந்தர் சிங். பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவரது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எம்.எல்.ஏ. பூபிந்தர் சிங் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார். அதன் பின்பு அவர் சற்று கிரிக்கெட் விளையாடினார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த எம்எல்ஏ பூபிந்தர் சிங் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனே அங்கிருந்த பூபேந்திரசிங்கின் உதவியாளர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்க வந்த பூபிந்தர் சிங் எம்.எல்.ஏ. காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mla bhupendra singh injured cricket match in odisa


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->