சுவாமி பிரசாத் மவுர்யாவின் நாக்கை வெட்டுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு -
mauria speech contravicy
16-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட 'ராம சரித மானஸ்' என்ற நூலை அயோத்தியை சேர்ந்த துளசி தாசர் என்பவர் இயற்றினார். இந்த நூலை தமிழில் 'ஸ்ரீ துளசி ராமாயணம்' என்று அழிப்பார்கள்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநில சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த சுவாமி பிரசாத் மவுர்யா இந்த நூல் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"ராமசரித மானஸ் நூலின் ஒரு இடங்களில் சாதியை குறிப்பிட்டு அவமதிக்கிறது. இந்த நூலை தடை செய்ய வேண்டும்" என்று அவர் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில், மவுர்யாவின் நாக்கை வெட்டுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று, அகில பாரதிய இந்து மகாசபைஅறிவித்து உள்ளது.
இன்று மவுர்யாவை கண்டித்து அகில பாரதிய இந்து மகாசபை நடத்திய போராட்டத்தில், அவரின் உருவ பொம்மை எரிக்கபட்டது.
போராட்டத்தின் நடுவே பேசிய அந்த அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர், "ராம சரிதமானஸ் நூலை அவமதித்ததுடன் இந்து மதகோட்பாடுகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய மவுர்யாவின் நாக்கை யார் வெட்டி கொண்டு வந்தாலும், அவருக்கு ரூ.51 ஆயிரம் பரிசுக்கான காசோலை வழங்கப்படும்" என்றார்.