மனைவியின் குரலைக் கேட்க ஆசைப்பட்ட கணவன் - நொடியில் நடந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் டோம்பிவலி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுதாகர் யாதவ் - சஞ்சனா யாதவ். இருவருக்கும் இடையே கடந்த 19-ந் தேதி சண்டை வந்துள்ளதையடுத்து, சஞ்சனா தனது சகோதரி வீட்டுக்குச் சென்று தங்கியுள்ளார்.

இந்த நிலையில், மறுநாள் காலை பத்து மணியளவில் சஞ்சனா வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது, சுதாகர் அவருக்கு போன் செய்து கடைசியாக இரண்டு நிமிடம் உன் குரலை கேட்க வேண்டும் என்றும், வாட்ஸ்அப்பில் தூக்குப்போடப் போகும் புகைப்படத்தையும் அவருக்கு அனுப்பியுள்ளார். 

இதைப்பார்த்து, பதறிப்போன சஞ்சனா, பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து தனது வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியதையடுத்து சுதாகரின் வீட்டுக்கு சென்ற அவர் கதவைத் தட்டியுள்ளார். உள்ளேயிருந்து எந்த பதிலும் வரவில்லை. 

இதனால், சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுதாகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man sucide after spoke wife in maharastra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->