விமான நிலையத்தில்1 கிலோ தங்கம் பறிமுதல் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!  - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் பயணம் செய்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

அப்போது, ஒருவரின் செயல்பாடுகள் சந்தேகப்படும் வகையில் இருந்ததால் அவரைப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது மஞ்சள் உரையில் தங்க கட்டிகள் அடைக்கப்பட்டு, அவரது இடுப்பில் சுற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அதிகாரிகள் அவரிடம் இருந்து 1.068 கிலோகிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 67 லட்சம் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. 

அதாவது, 10 ஆயிரம் ரூபாய் கூலி பெற்றுக் கொண்டு துபாயிலிருந்து  இந்தியாவிற்கு தங்கத்தை கடத்தி வந்ததாக தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவருக்கு கூலி கொடுத்து தங்கத்தை கடத்தி வர செய்தது யார்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் விமான பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for gold kidnape in amirtasaras airport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->