பிரபல கோவிலில் திடீர் தீ விபத்து: 13 பேர் மருத்துவமனையில் அனுமதி.!
Mahakaleshwarar temple fire accident
மத்திய பிரதேசம், உஜ்ஜை நகரில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவிலில் இன்று காலை கருவறையில் சுவாமி பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இதற்காக காலையிலேயே பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக காத்திருந்தனர். அப்போது பஸ்ம ஆரத்தி நடந்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் தலைமை பூசாரி பணியாளர்கள் என மொத்தம் 13 பேர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து காயமடைந்தவர்கள் மீட்கபட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் கோவிலில் பெரும் பரபரப்பு நிலவியது.
English Summary
Mahakaleshwarar temple fire accident