மகா கும்பமேளா தொடங்கியது..லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.அவர்கள் புனிதநீராடினார் .உலகின் மிகப்பெரிய விழாவான இந்த மகா கும்பமேளாவில் சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் அரித்வார், மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ஆகிய 4 ஊர்களில் உள்ள ஆற்றங்கரையில் கும்பமேளா கொண்டாடம் களைகட்ட தொடங்கியுள்ளது.

அதில்  மிகவும் புகழ்பெற்றது கும்பமேளாவே பிரயாக்ராஜில் நடைபெறும் . அங்கு கங்கை, யமுனை மற்றும் கண்களுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக இந்து மக்களால் கருதப்படுகிறது.மேலும் 3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள். எனவே கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதுகிறார்கள் என சொல்லப்படுகிறது.

 சிறப்பு வாய்ந்த இத்தகைய மகா கும்பமேளா நிகழ்ச்சிகள் இன்று  (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் வெளி மாநிலம் .வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பகதர்கள் வருகைதந்துள்ளனர், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.அவர்கள் புனிதநீராடினார் .உலகின் மிகப்பெரிய விழாவான இந்த மகா கும்பமேளாவில் சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Maha Kumbh begins Lakhs of devotees gathered


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->