6 வயது சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம்.. உடல் முழுவதும் காயத்துடன் மீட்கப்பட்ட சிறுமி.. கண்ணீர் சோகம்.!!
Madhya pradesh 6 year child girl sexual abuse police investigation
கரோனா வைரஸ் தாக்கத்தால் பெரும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் 6 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள டொமொஹ் மாவட்டத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் 6 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், சிறுமி சம்பவத்தன்று மாயமாகியுள்ளார்.
இவரை காணாது தேடியலைந்த பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்து புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
இந்த விசாரணையில் தொடர்ந்துகொண்டு இருக்கும் சமயத்திலேயே, சிறுமியின் கண்கள் மற்றும் உடல் முழுவதும் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். மேலும், சிறுமியின் பெண்ணுறுப்பு மற்றும் மார்பகம் போன்ற பகுதிகளில் காயங்கள் அதிகளவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், குற்றவாளியை கைது செய்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Madhya pradesh 6 year child girl sexual abuse police investigation