பெரும் பரபரக்கும் மத்தியில்.. தேர்தல் ஆணையம் வெளியிடும் முக்கிய அறிவிப்பு.!!
loksbha election date will be announce today or tomorrow
இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர்சிங் சந்து ஆகியோர் சற்று முன்னர் பதவியேற்று கொண்டனர். இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைப் பொது தேர்தலுக்கான தேதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இன்று காலை 11 மணியளவில் இந்திய தேர்தல் ஆணையர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் மற்றும் புதிதாக பதவியேற்ற தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் தேர்தல் பத்திர நிதி விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த சூழலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
loksbha election date will be announce today or tomorrow