மது பிரியர்களின் நரம்பு மண்டலம், லிவர், கிட்னி பாதிப்பு 100% அதிகரிப்பு! அதிரவைக்கும் ஆந்திர ரிப்போர்ட் அலர்ட்! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆந்திராவில் இது சுகாதார நெருக்கடியாக தற்போது மாறி உள்ளது.

அம்மாநில அரசின் என்டிஆர் வைத்திய சேவா டிரஸ்ட் வெளியிட்ட தரவுகள், மதுவால் உண்டாகும் நோய்கள் கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன.

கடந்த 2014-19 காலகட்டத்தில் கல்லீரல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றோர் எண்ணிக்கை 14,026 இருந்த நிலையில், 2019-24-ல் இது 29,369 ஆக உயந்துள்ளது. இது சுமார் 109% அதிகரிப்பு. இதேபோல், இந்த நோய்களுக்கு சிகிச்சை செலவு ரூ.68.98 கோடியில் இருந்து ரூ.141.20 கோடியாக உயர்ந்துள்ளது.

அதேபோல் மதுபழக்கத்தால் ஏற்பட்ட நரம்பு மண்டல பாதிப்புகள் 1,276-ல் இருந்து 12,663 ஆக உயர்ந்துள்ளன. சிறுநீரக பாதிப்புகளும் 49,060-ல் இருந்து 90,385 ஆக அதிகரித்துள்ளன. இதனால் சிகிச்சைக்கு செலவாகும் மொத்த தொகை ரூ.598.77 கோடியிலிருந்து ரூ.941.65 கோடியாகப் அதிகரித்துள்ளதாக அந்த புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Liqueur side effort report Andhra


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->