சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம்! விமான விபத்தை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்! - மருத்துவர்கள் - Seithipunal
Seithipunal


குஜராத் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம்,நேற்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்டது.இந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.மேலும்,விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 டிரீம்லைனர்' விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர்.

இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.இந்நிலையில், இந்த விமான விபத்து குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கோரி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு துருவ் சவுகான் மற்றும் சவுரவ் குமார் ஆகிய 2  மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடித்ததில் அவர்கள் குறிப்பிட்டதாவது," விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விமானம் விழுந்து நொறுங்கிய பி.ஜே. மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்கள் உட்பட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனுடன்  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை மதிப்பீடு செய்து வழங்க, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு/ஐகோர்ட்டு நீதிபதிகள், விமான போக்குவரத்து நிபுணர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Letter to Supreme Court They should voluntarily investigate the plane crash Doctors


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->