கேரள மாநிலத்தை சோகத்தில் ஆழ்த்திய கொடூர விபத்து! விண்ணை முட்டிய மரண ஓலம்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், வயநாடு பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சென்ற ஜீப் கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்து உள்ளதாக முதல் பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

வயநாடு அடுத்த தலபுலா கானோட் குடா என்ற இடத்தில் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

தேயிலை தோட்ட கூலித்தொழில் 12 பேர் வேலை முடிந்து வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் நடந்துள்ளது.

விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். உயிர் பிழைத்த 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று பிற்பகல் 3.45 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்குள்ளான ஜீப்பில் தனியார் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களே பயணம் செய்துள்ளனர்.

தலபுலாவில் இருந்து வான்மணி பகுதிக்கு செல்லும் போது, ஜீப் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை வயநாடு மருத்துவக் கல்லூரியில் உள்ளூர் மக்கள் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Vayanadu Jeep Accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->